×

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மினி இ-லாபி புதிய ஏடிஎம் திறப்பு விழா

தர்மபுரி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொம்மிடி கிளை பழைய இடத்தில் இருந்து, புதிய இடமான சேலம் மெயின் ரோடு பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டது. அதே கட்டிடத்தில் மினி இ-லாபி திறப்பு விழா செய்யப்பட்டது. இடமாற்றம் செய்யப்பட்ட புதிய கட்டிடமான டிஎம்பியை, தொழில் அதிபர் கவுதம் திறந்து வைத்தார். புதிய கட்டிடத்தில் செல்வ சிவகாமி குத்து விளக்கு ஏற்றினார். கணினி சேவை மையத்தை கணேஷ் தொடங்கி வைத்தார். பாதுகாப்பு பெட்டக அறையை பரமசிவம் திறந்த வைத்தார். பாதுகாப்பு பெட்டகத்தை கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.புதிய மினி இ-லாபியை கோவிந்த கவுண்டர் தொடங்கி வைத்தார்.

புதிய ஏடிஎம்மை சதிஷ் குமார் தொடங்கி வைத்தார். தானியங்கி கணக்கு புத்தக பதிவை ராஜா மணி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சேலம் மண்டல அலுவலக நிர்வாக அதிகாரி ஆறுமுகசாமி வரவேற்றார். பின்னர், டிஎம்பி சேலம் மண்டல அலுவலக ரீஜனல் மேலாளர் சுரோந்திர பாலாஜி பேசினார். பொம்மிடி கினள மேலாளர் உதயகுமார் நன்றி கூறினார்.


Tags : Tamil Nadu ,Mercantile Bank ,ATM , The toy branch of Mercantile Bank of Tamil Nadu has been relocated from its old location to the new location in Salem Main Road.
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...