சென்னை: பேராசிரியர் க. அன்பழகனின் தொடக்கப்புள்ளியும், முற்று புள்ளியும் இனமானம்தான் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மேலும் திராவிட இயக்கத்தின் கடைசி பெருந்தலைவர் மறைந்துவிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்தில் க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.