சென்னை : திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையில் தெளிவுரை பேராசிரியர் அன்பழகன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். க. அன்பழகன் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன், அதில்,தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.