×

திருவலம் அருகே பரபரப்பு கார், மினிவேனில் செம்மரக்கட்டை கடத்தல்: தப்பி ஓடிய கும்பலுக்கு வலை

திருவலம்: திருவலம் அருகே கார் மற்றும் மினிவேனில் கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிச்சென்ற  கும்பலை தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்து கண்டிப்பேடு பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் திருவலம் அடுத்து கண்டிப்பேடு பகுதியில் போலீசார்  ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று பழுதடைந்த மினி சரக்கு வேனை கட்டி இழுத்துக்கொண்டு  சென்றது. இதைப்பார்த்து, சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை பின்தொடர்ந்து ெசன்றனர். திருவலம் அடுத்த சேர்க்காடு பகுதியில் கடைகள் உள்ள  இடத்தில் நின்றது.  போலீசார் தங்களை பின்தொடர்ந்து வந்ததை அறிந்த காரில் இருந்த 8 பேர் இறங்கி தப்பியோடினர். போலீசார் அவர்களை பிடிக்க  முயன்றனர். ஆனால், அவர்கள் அங்கு முன்னால் சென்று கொண்டிருந்த மற்றோரு மினி சரக்கு வேனில் கண் இமைக்கும் நேரத்தில் ஏறி அங்கிருந்து  தப்பி சென்றனர்.

இதையடுத்து போலீசார், கார் மற்றும் சரக்குவேனை சோதனை செய்தபோது, அதில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரிந்தது. தகவலறிந்த  பொன்னை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கார் மற்றும் சரக்கு வேனையில் இருந்த 843 கிலோ எடையுள்ள 29  செம்மரக்கட்டைகளை இரண்டு வாகனங்களுடன் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ₹8 லட்சத்து 40  ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : Thiruvananthapuram ,gang ,Stir ,Tiruvalam Car , Stir ,Tiruvalam, Car, , fleeing gang
× RELATED மோடியின் வருகையை முன்னிட்டு...