×

மதத்தால் மக்களை மோடி பிரிக்க நினைக்கிறார் நாடு அபாயத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது: ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

சென்னை: மதத்தால் மக்களை ேமாடி பிரிக்க நினைக்கிறார் என்றும், இந்திய நாடு தற்போது அபாயத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது என்றும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார்.சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் நூல் வெளியீடு மற்றும் அவரது 95வது பிறந்தநாள் விழா சத்திய மூர்த்திபவனில் நடந்தது. விழாவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்து, ‘சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத்’ என்ற நூலை வெளியிட்டார். முதல் பிரதியை தஞ்சை ராமமூர்த்தி பெற்றுக் கொண்டார். மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், வீரபாண்டியன், ரூபிமனோகரன், ஏ.ஜி.சிதம்பரம், பூவை ஜேம்ஸ் முன்னிலை வகித்தனர். மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், மாசிலாமணி, பொன்னடியான், கண்மணி சுப்பு, ஏ.பி.சி.வி சண்முகம், பொன் கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினர். கார்மேகம், திருஞானம், நாகை கோவிந்தசாமி, சங்கரன், பழனி பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பொன்னியின் செல்வன் விருது வழங்கப்பட்டது.

 விழாவில், தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், சிவராமன், ஏழுமலை, நாஞ்சில் பிரசாத், ராகுல்காந்தி, மயிலை தரணி, பாலமுருகன், சுமதி அன்பரசு, செல்லம்மாள், முனீஸ்வர் கணேஷ், பி.வி.தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது:  இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு கிடையாது என்ற உத்தரவாதத்தை நாடு முழுவதும் எனது தந்தை பெற்று தந்தார் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. நான் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மூன்று முறை தலைவராக இருந்திருக்கிறேன். அப்போது கூட நான் எதுவும் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

 எனது தந்தை வழியில் வந்த நான், அவரைப் போல திருப்திப்படும் வகையில் சாதிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் என்னால் இயன்றதை காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து செய்வேன். தற்போது இந்திய நாடு பெரிய அபாயத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது. பிரதமர் மோடியின் பிடியிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. மதத்தால் மக்களை மோடி பிரிக்க நினைக்கிறார்.  இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Narendra Modi ,country ,EVKS , Modi,country , danger, EVKS
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின்...