×

லஞ்சம் வாங்கி கைதான எஸ்ஐக்கள் 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் லஞ்சம் வாங்கி கைதான சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொருட்கள் பாதுகாப்பு அறையில் வைத்திருந்த லேப்டாப் திருட்டுபோன சம்பவத்தில், அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் தவிர்க்க, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் ₹15 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி சிபிசக்கரவர்த்தி நேற்று உத்தரவிட்டார்.

Tags : Arrested ,bribery, action
× RELATED மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு,...