×

ராமேஸ்வரம் கடல் பகுதியில் கரைஒதுங்கிய மர்ம படகு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே முகுந்தராயர் சத்திரம் வடக்கு கடற்கரையில் பைபர்கிளாஸ் படகு, கரை ஒதுங்கியுள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்று போலீசார் சோதனையிட்டனர்.  முகுந்தராயர்சத்திரத்துக்கும், தனுஷ்கோடிக்கும் இடையேயான கடல்  பகுதியில், கரையோரத்தில் பைபர் கிளாஸ் படகு ஒன்று ஒதுங்கியிருந்தது.

இலங்கை பதிவு எண் கொண்ட பைபர்கிளாஸ் படகில்  இயந்திரம், மீன்பிடி வலைகள் எதுவும் இல்லை. ஆள் அரவமற்ற பகுதியில்  அதிகாலையில் படகு ஒதுங்கியிருந்ததால் படகில் வந்தவர்கள் இயந்திரத்தை  மணலுக்குள் புதைத்து விட்டு ஊருக்குள் சென்று விட்டனர். எத்தனை பேர் படகில் வந்தனர் என்ற விபரம் எதுவும்  அறிய முடியாத நிலையில் கரை ஒதுங்கிய இலங்கை படகை, கியூ பிரிவு  போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.



Tags : Rameshwaram Rameswaram ,sea , Rameswaram, Karaiotunkiya, Mystery boat
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!