சென்னை: கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு எதிரான அவதூறு வழக்குகளை மட்டும் தமிழக அரசு வாபஸ் பெறுவதாக ஐகோர்ட்டில் திமுக தரப்பு புகார் தெரிவித்துள்ளது. அரசு, முதல்வர், அமைச்சர்களை அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அரசு சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.