×

பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது : திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை : பெண் சிசு கொலை செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கருத்தம்மா படத்தில் வருவது போல பெண் சிசு ஒன்று கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பெண் சிசு கள்ளிப்பால் கொடுத்து கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகன் -சௌவமியா தம்பதிக்கு ஏற்கனவே 2.5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டின் அருகிலேயே புதைத்துள்ளனர். குழந்தையின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தை எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தொண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2வதாக பெண் குழந்தை பிறந்ததால் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து வைரமுத்து, சௌமியா  மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  

ஸ்டாலின் ட்வீட்


இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பெண் சிசு கொலை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில்,பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது.மதுரை மாவட்டம் புள்ளநேரியில் 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது.கண்டனத்திற்குரிய இச்செயலில் ஈடுபட்டோர்-துணைநின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில் #பெண்குழந்தைகள்பாதுகாப்புநாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண்சிசுக்களை பாதுகாக்க வேண்டும்!எனக் தெரிவித்துள்ளார்.


Tags : Stalin ,death ,DMK ,Tamil ,murderer ,murder , DMK, leader, Stalin, MK Stalin, woman, infant, murderer, usilampatti, kallipal
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...