×

திருச்சியில் காவலாளி தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயலும் சைக்கோ: திடுக்கிடும் சிசிடிவி காட்சி வெளியீடு

திருச்சி:  திருச்சி ஒத்தக்கடை பகுதியில் கடந்த 3ம் தேதி தனியார் வணிக வளாகத்தில் காவலாளியின் தலையில் மர்ம நபர் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ய முயற்சிக்கும் சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் தற்போது வெளியாகியுள்ளன. திருச்சி மாநகராட்சி பகுதிக்குப்பட்ட ஒத்தக்கடை பகுதியில் தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. மேலும், இங்கு செல்போன், மின்னணு சாதனங்கள், காலணிகள் என பல்வேறு கடைகள் உள்ளன. இந்நிலையில், பொன்மலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் காவலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயற்சிக்கும் சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அப்போது, அவரிடமிருந்த பணம், செல்போன்களை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். மேலும் அக்கம்பக்கத்தினர் இணைந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த செந்தில்குமாரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்ற சம்பவம் சேலத்திலும் நடந்துள்ளது. ஆகையால், அதே நபர்தான் இங்கும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் பலகோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : policeman , Trichy, Watchman, Psycho, CCTV Scene, Release
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...