×

காட்பாடி அருகே ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காட்பாடி சேர்க்காடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் நடத்திய சோதனையில் கடத்தல்காரர்கள் சிக்கியுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் தப்பியோடிவிட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Andhra Pradesh ,Katpadi 2 ,Katpadi , Katpadi, Andhra Pradesh, smuggling, cemmarakkattaikal
× RELATED ₹3.80 லட்சம் மதிப்புள்ள பைக்குகள்...