சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் குறித்த பதற்றம் வேண்டாம், பயம் வேண்டாம். விமான நிலையங்களில் கொரோனா சோதனை அதிகப்படுப்பட்டுள்ளது, தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என கூறியுள்ளார்.