திருவொற்றியூர்: எண்ணூர், அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் பார்த்திமேரி (62). இவர், நேற்றுமுன்தினம் மாலை வியாசர்பாடியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, மாநகர பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, அதே பஸ்சில் பயணம் செய்த 2 பெண்கள், “உங்கள் கழுத்தில் உள்ள செயின் அறுந்து விழுவதுபோல் உள்ளது. எனவே, கழற்றி பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள்,’’ என பார்த்திமேரியிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய அவர், செயினை கழற்றி கைகுட்டையில் சுற்றி ைகப்பையில் வைத்துள்ளார். ராஜாகடை பஸ் நிறுத்தம் வந்தபோது அவரது பை பிளேடால் அறுக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சிடைந்தார். பையை திறந்து பார்த்தபோது தங்க செயின் மாயமானது தெரிந்தது. அதன்பிறகுதான் தனது அருகில் இருந்த 2 பெண்கள் தனது கவனத்தை திசை திருப்பி 7 சவரன் செயின் மற்றும் ரூ.6 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீசில் பார்த்திமேரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் செயின் திருடிச்சென்ற பெண்களை தேடி வருகின்றனர்.