×

கோயில் பூட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை

சென்னை: கோயில் பூட்டை உடைத்து 20 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார்  தேடி வருகின்றனர். மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே பழையனூர் சாலை கிராமத்தில் துலுக்காணத்தம்மன் கோயில் உள்ளது. நேற்று அதிகாலையில் கோயில் வழியாக சென்ற மக்கள், கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம், அம்மனுக்கு அணிவிக்கப்படும் 20 சவரன் நகைகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : robbers ,shaving robbers , Temple lock, 20 shaving robbery
× RELATED பட்டாக்கத்தியுடன் திரிந்த 2 ரவுடிகள் கைது