×

காவல்நிலைய முதல் மாடியில் இருந்து குதித்து டிரைவர் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை ஜாபர்கான்பேட்டையை ேசர்ந்தவர் குமார் (36), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் ஜாபர்கான்பேட்டையில் பொது இடத்தில் மது குடித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து, குமரன் நகர் போலீசார் விசாரணைக்காக நேற்று முன்தினம் இரவு ஆட்டோ டிரைவரை பிடித்து காவல்நிலையத்தின் முதல் மாடியில் அமர வைத்திருந்தனர். அப்போது திடீரென மது போதையில் இருந்த ஆட்டோ டிரைவர் காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த விபத்தில் குமாருக்கு தலை உள்ளிட்ட உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.  அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணைக்கு அழைத்து வந்த நபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதைதொடர்ந்து நேற்று முன்தினம் பணியில் இருந்த போலீசாரிடம் தற்கொலை முயற்சி குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,police station , Police, driver, attempted suicide
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...