×

புதுச்சேரியில் பரிதாபம் நடிகர் ஆனந்தராஜ் தம்பி விஷம் குடித்து தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி திருமுடி நகரில், நடிகர் ஆனந்தராஜின் தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுவை திருமுடிநகரை சேர்ந்தவர் கனகு என்ற கனகசபை (44). திருமணமாகாத இவர் தனியாக வசித்து ஏலச்சீட்டு  தொழில் செய்து வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கதவை பூட்டிவிட்டு படுக்க சென்றுள்ளார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவரது வீட்டுக்கதவு திறக்கப்படாத நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து உடனே பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கனகசபை இறந்து கிடந்தார். தொழில் நஷ்டம் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது அறையில் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதன்படி, வழக்குபதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கனகசபை, உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Anandraj Thambi ,suicide ,Puducherry , Puducherry, pity, actor Anandaraj, brother, poisoned, suicide
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி