×

சென்ட்ரல்- செகந்திராபாத்துக்கு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்ட்ரல்- செகந்திராபாத் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல்- செகந்திராபாத் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் மார்ச் 6, 8, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

அதைப் போன்று சென்னை சென்ட்ரல்-கவுகாத்தி இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் மார்ச் 9, 16, 23, 30 தேதி திங்கட்கிழமைகளில் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கவுகாத்திக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ெதாடங்கப்பட்டது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Secunderabad ,Southern Railway ,Railway ,Central- Secunderabad ,Announcement , Central- Secunderabad, Railway, Southern Railway, Announcement
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...