×

கோவையில் நள்ளிரவில் பள்ளிவாசலுக்குள் பெட்ரோல் குண்டுவீச்சு

கோவை: கோவையில் பள்ளிவாசலுக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அது வெடிக்காததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள வேதாம்பாள் நகரில் இதாயத்துல் முஸ்லிம் பள்ளிவாசல் உள்ளது. இங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவில் பணி முடிந்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர்கள் பள்ளிவாசலுக்குள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர்.  

சத்தம் கேட்டு எழுந்து வந்த ஊழியர்கள் பார்த்தபோது திரியுடன் பீர்பாட்டில் வெடிக்காமல் சிதறி கிடந்தது. தகவல் அறிந்து அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அங்கு குவிந்தனர். உடனடியாக இது குறித்து சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிவாசலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Tags : school ,mosque ,Coimbatore , Petrol bombing , Coimbatore, inside , mosque
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி