×

பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு வேறொரு திருமணம்: வீட்டில் தூங்கிய புதுமாப்பிள்ளையை அதிகாலையில் தூக்கிய போலீசார்: மணப்பெண் வீட்டார் மகிழ்ச்சி

கேடிசி நகர்: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தtவர் ஜெயக்குமார் (28). டிப்ளமோ இன்ஜினியரான இவர், மரக்கடை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் வீரய்யா. மதிமுக பிரமுகர். இவரது மகள் மாலா (27). எம்.காம்., எம்.பில். படித்துள்ளார். ஜெயக்குமாருக்கும், மாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். மாலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறிய ஜெயக்குமார், பெற்றோர் இல்லாத நேரத்தில் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்தார். இதில் மாலா கர்ப்பமானார். இது அவரது பெற்றோருக்கு தெரியவில்லை.

இந்தநிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் மாலா அவரிடம் பேசி வந்தார். ஆனால் ஜெயக்குமார் திருமணத்தை காலம் தாழ்த்தி வந்தார். இதற்கிடையில் ஜெயக்குமாருக்கும், தூத்துக்குடியில் நர்சாக வேலை பார்க்கும் பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. அவருக்கு இன்று (வெள்ளி) காலை பாளையங்கோட்டையில் திருமணம் நடப்பதாக இருந்தது.

இதையறிந்த மாலா அதிர்ச்சியடைந்தார். காதலனுடன் திருமணம் நடக்கும் என்று கனவில் மிதந்த மாலாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இதுபற்றி பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்களும் உறைந்து போயினர். பின்னர், மாலாவை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயக்குமாரை அதிகாலையில் கைது செய்தனர். திருமணத்துக்கு முன்பே அவர் கைதானதால் மணப்பெண் வீட்டார் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags : home ,cop , Another marriage, newborn, a cop
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...