மதுரை: அரசு, ஆதி திராவிடர் பள்ளிகளில் எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்? என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என்றும் வினவியுள்ளனர். ஆதி திராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.