×

கொரோனாவுக்கு ஈரானில் இன்று மட்டும் 15 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு

தெஹ்ரான்: கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகானில் பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. 6 கண்டங்களில் 80 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உயிரிழப்பு 2 ஆயிரத்து 981 ஆக அதிகரித்துள்ளதால் அந்நாடு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரானில்
இந்த நோயால் நேற்று வரை 92 பேர் உயிரிழந்திருந்த நிலையில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்று மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே பலியானோர் எண்ணிக்கை 107-ஐ எட்டியுள்ளது.


Tags : Iran , Corona, Iran
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...