ஐதராபாத்: கொரோனா அச்சுறுத்தலால் ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் 3 வழித்தடங்களில் நாள்தோறும் 4 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது நாள்தோறும் 20 ஆயிரம் பேர் மட்டுமே மெட்ரோ ரயில் பயணம் செய்கின்றனர்.