சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்வு நடைமுறைகள் குறித்து தவறான விவரங்களை மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு அளித்துள்ளார்கள்.மேலும் முழு விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.