×

கடினமான சூழலை கையாள கற்றுக் கொடுத்தது யார்?... சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி விளக்கம்

சென்னை: கடினமான சூழ்நிலையை கையாளும் கலையை கற்றுக்கொள்ள உதவியது ஐபிஎல் தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். நடப்பாண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க உள்ளது. சுமார் 2 மாதம் கிரிக்கெட் ரசிகர்களை முழுக்க முழுக்க கட்டிப்போட இருக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்திலேயே சென்னை-மும்பை அணிகள் விளையாட இருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்து வருகிறது.

ஐபிஎல் தொடருக்கு ஆயத்தம் ஆகும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில நாட்களாக தோனி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். முன்னதாக பயிற்சிக்கு இடையே பேசிய தோனி ; ஐபிஎல் தொடர் தான் கடினமான சூழ்நிலையை கையாளும் கலையை கற்றுக்கொள்ள உதவியதாக தெரிவித்தார். சென்னை ரசிகர்கள் தன்னை யாரும் பெயர் சொல்லி அழைப்பது இல்லை என்றும், தல என்று தான் அழைக்கிறார்கள். அது அவர்கள் எனக்குக் கொடுக்கும் மரியாதையையும் அன்பையும் காட்டுகிறது. தென்னிந்தியா பக்கம் வந்தாலே இங்கே யாரும் என்னைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை.

தல என்றுதான் அழைப்பார்கள். தல என்ற வார்த்தை அவங்க என் மேல வச்சிருக்க அன்பைக் காட்டும் எனவும் தோனி பெருமையுடன் குறிப்பிட்டார்.

Tags : Dhoni ,Chennai Super Kings , Tough situation, Chennai Super Kings, Dhoni
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...