நாமக்கல்: தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அகில இந்திய கோட்டாவில் அதிக மதிப்பெண் பெற்று தமிழக மாணவர்கள் சேர முடியும். அகில இந்திய கோட்டாவில் 15 சதவீத இடங்கள் மட்டுமே வேறு மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீதம் தமிழக மாணவர்களுக்கு தான் வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.