×

சென்னை அண்ணாசாலை குண்டுவீச்சு தொடர்பாக 6 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: சென்னை அண்ணாசாலை குண்டுவீச்சு தொடர்பாக 6 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பயங்கர சத்தத்துடன் 2 குண்டுகளும் வெடித்து அந்த பகுதி முழுவதும் சிறிது நேரம் கரும் புகை மண்டலத்தில் மூழ்கியது.

Tags : Chennai ,bombing ,bomb blast , Chennai, Anna Salai, Bombing, Tambaram Court, Saran
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை