×

வனப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி தீவிரம்

வருஷநாடு: வனப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கடமலை மயிலை ஒன்றியத்தில் மூன்று வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வருஷநாடு வனச்சரகம் மேகமலை வனச்சரகம் கண்டமனூர் வனச்சரகம்  உள்ளது. இந்த வனச்சரக பகுதிகளில் அதிகளவில் தனியார் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் இதை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதற்காக  ஒவ்வொரு வனச்சரக கட்டுப்பாட்டிலும் வனச்சரக மற்றும் வன குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மழைக்காலங்களில் அதிகளவில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். மேலும்  கோடைகாலங்களில் வேட்டை கும்பல் ஒருபுறம் துரத்துகிறது. இது போன்ற பணிகளை கண்காணிப்பதற்கு அப்பகுதியிலேயே புதிய குடியிருப்பு  கட்டிடங்கள் அதிகளவில் வனத்துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் வனத்துறை அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும்  தெரிவித்தனர்.



Tags : building , intensity ,building , residential , wilderness
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி