×

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை எதிர்த்து கோட்டை முன் 9ம்தேதி ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் நடந்தது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுதொடர்பான தீர்மானம்: தமிழக அரசின் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கண்டித்தும், குடியுரிமையை பறிக்கும் சட்டத் திருத்தத்தையும், கணக்கெடுப்பையும், பதிவேட்டையும் எதிர்த்து போராடும் மக்களின் உணர்வை கருத்தில் கொண்டும் மார்ச் 9ம் தேதி தொடங்கி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிஐ ஏற்க மாட்டோம் எனவும், தமிழகத்தில் என்.பி.ஆர்., அமல்படுத்தப்படாது எனவும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மார்ச் 9 கோட்டை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

Tags : demonstration ,CAA ,NRC ,Fortress ,Marxist Communist Announcement ,NPR , CAA, NPR, NRC, Opposition, Fortress, 9th, Demonstration, Marxist Communist, Announcement
× RELATED சிஏஏ அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!!