×

ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் ஏவுவது ஒத்திவைப்பு: இஸ்ரோ அறிவிப்பு

சென்னை: இஸ்ரோ சார்பில் ஜி.எஸ்.எல்.வி-எப் 10 ராக்கெட் மூலம் புவிகண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ இன்று மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. இதற்கான பணிகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். ஆனால், ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைக்கப்படுவதாக நேற்று மாலை 3.20 மணிக்கு அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதில் தொழில்நுட்ப காரணங்களுக்காக ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைக்கப்படுவதாகவும், வேறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Tags : rocket launcher ,GSLV ,ISRO ,announcement , GSLV-F10 rocket, launch, deferral, ISRO announcement
× RELATED நாளை விண்ணில் பாய்வதாக இருந்த...