×

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே துரைச்சாமிபுரத்தில் கணேசன் (46) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நேற்று பகல் 2 மணி அளவில் வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் நடந்தது. ஒரு அறையில் பட்டாசு தயார் செய்யும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் சேதமடைந்தன. ஒரு அறை வெடித்து தரைமட்டமானது. வெடிவிபத்தில் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி, இந்திரா காலனியை சேர்ந்த குருசாமி (37) என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். மற்றொரு அறையில் வேலை பார்த்த தொழிலாளி படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Tags : fireworks explosion ,Sivakasi Sivakasi , Sivakasi, fireworks, explosion, one killed
× RELATED விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச்...