×

புழல் சிறையில் 83 கைதிகள் பிளஸ் 1 தேர்வு எழுதினர்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு நேற்று துவங்கியது. இதனையடுத்து புழல் மத்திய சிறையில் கைதிகள் பிளஸ் 1 தேர்வு எழுத மையம் அமைக்கப்பட்டது. இதில் புழல் தண்டனை சிறை 19, விசாரணை சிறை 2, வேலூர் சிறை 3, கோவை சிறை 17, மதுரை சிறை 10, பாளையங்கோட்டை சிறை 9, கடலூர் சிறை 9, சேலம் சிறை 4, திருச்சி சிறை 5 பேர் என 78 கைதிகள் தேர்வு எழுதினர்.

மேலும், பெண் கைதிகள் சார்பில் புழல் பெண்கள் சிறை இரண்டு பேர், வேலூர் பெண்கள் சிறை ஒருவர், கோவை பெண்கள் சிறை 2 பேர் என மொத்தம் 5 பெண்கள் உள்ளிட்ட 83 சிறைக்கைதிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிளஸ் 1 தேர்வு எழுதினர்.

Tags : Prisoners ,Pullam Jail Writing Plus 1 Exam Puzhal Prison , Puzhal Prison, 83 prisoners, plus 1 choice, wrote
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...