×

ரயில் மோதி இருவர் பலி

பெரம்பூர்: மின்சார ரயிலில் அடிபட்டு பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். புளியந்தொப்பு, நேரு நகரை சேர்ந்தவர் சோமு (54). இவர் நேற்று காலை 8.30 மணி அளவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நேற்று மதியம் வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவங்கள் குறித்து பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : collision , Train, collision, two, kills
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு