×

லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏமம் கிராமத்தை சேர்ந்தவர்  ஜெகநாதன்(45). விவசாயி. இவர், பட்டா மாற்றம் தொடர்பாக அதே கிராமத்தை  சேர்ந்த, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்ராஜாவிடம் விண்ணப்பித்துள்ளார்.  பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால், 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இது  குறித்து ஜெகநாதன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.  அவர்கள் அறிவுரைபடி கார்த்திக்ராஜாவிடம் அவர் பணம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார், விஏஓ கார்த்திக்ராஜாவை கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்புசிறப்பு  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு சாட்களிடம் விசாரணை முடிவடைந்த  நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கு 4  ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி மோகன்  தீர்ப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து, கார்த்திக்ராஜா(36)வை போலீசார்  சிறையில் அடைத்தனர்.

Tags : VAO , Bribery, VAO, imprisonment
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!