கோவை: மனிதநேயத்தை வலியுறுத்தி கோவையில் கோனியம்மன் தேர் விழாவை முன்னிட்டு ஒப்பணக்கார வீதியில் உள்ள கோயமுத்தூர் அத்தர் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக 10000 பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தீ சட்டி ஏந்தி வந்த பக்தர்க்கு இஸ்லாமிய சகோதரர் தண்ணீர் வழங்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.