×

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கொரோனா அலர்ட் சுற்றறிக்கை

சென்னை: வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மத்திய அரசின் உத்தரவால் தமிழக சுகாதாரத்துறை திணறி வருகிறது. அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய போதிய ஆட்கள் இல்லை என தமிழக சுகாதாரத்துறை புலம்பி வருகிறது. இதுவரை சீனா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. சென்னை, திருச்சி , மதுரை, கோவை விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு முழு வீச்சில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

Tags : Airports ,Tamil Nadu ,Corona , Corona
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...