சென்னை: நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விட்டோம் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். போக்குவரத்து அதிகம் உள்ள மாலை நேரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசிச்சென்றதால், அண்ணா சாலையில் பயணித்தவர்கள் பதற்றம் அடைந்தனர். சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி, குண்டு வீசிச்சென்றவர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுகொண்டனர்.