டெல்லி: ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் வடகிழக்கு டெல்லியின் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட செல்கின்றனர். கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும், அதே இடத்தில் சட்டத்திற்கு ஆதரவாக போராட நடத்த வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக வெடித்த நிலையில், வன்முறை சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.