மதுரை: 5 வார கால அவகாசம் வழங்கினால் தேர்தல் தேதியுடன் வருவீர்களா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து அவகாசம் கேட்டதால் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது.