×

தூக்கு தண்டனையை உறுதி செய்யும் வகையில்,நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களையும் நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

டெல்லி :நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள நான்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். முன்னதாக மரண தண்டனையை எதிர்த்து பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கருனை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் பவன் குப்தாவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி அரசு பரிந்துரைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற சில மணி நேரங்களிலேயே நிராகரிக்கும் பரிந்துரையை டெல்லி அரசு அனுப்பியது

நிர்பயா வழக்கின் பின்னணி


*டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

*அவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போய் இருக்கிறது.

*குற்றவாளிகள் நால்வரில் முகேஷ் குமார் சிங், அக்‌ஷய் குமார், வினய் குமார் சர்மா ஆகிய மூவரின் கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு உள்ளன. தங்கள் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

*இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 5-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வருகிற மார்ச் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

*இந்தநிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 27 ந்தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

*அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தவறானது என்றும் தன்னுடைய கருணை மனு தவறான அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

*ஆனால் பவன் குமார் குப்தாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

*சுப்ரீம் கோர்ட் மறு சீராய்வு மனுவை  தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் குப்தா ஜனாதிபதி முன் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். பவன் குமார் குப்தாவின் கருணை மனுவை  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  நிராகரித்து உள்ளார். மற்ற மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

Tags : President ,Republic ,convicts , Nirbhaya, executioner Pawan Kumar, mercy petition, President of the Republic, Ramnath Govind
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...