- மழை
- பகுதிகளில்
- திண்டுக்கல்
- நீலகிரி
- பிறகு நான்
- கோயம்புத்தூர்
- சென்னை வானிலை மையம் தண்டர்ஷவர்
- சென்னை வானிலை மையம்
சென்னை: கோவை, திண்டுக்கல், நீலகிரி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் சேலான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஏனைய பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும்.
திண்டுக்கல், மதுரை, சேலம், நாமக்கல், கரூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டம் பெருஞ்சாணி மற்றும் புத்தன் அணை பகுதிகளில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதபோல், குமரி மாவட்டம் பேச்சுப்பாறையில் 2 செ.மீ மழையும், நெல்லை மாவட்டம் தென்காசியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.