×

மூணாறு அருகே போதை ஆசாமிகளின் கூடாரமான கட்டிடம்: போலீசார் கவனிப்பார்களா?

மூணாறு: மூணாறில் கட்டுமானப் பணி முடியாத கட்டிடம் போதை ஆசாமிகளின் கூடாரமாக மாறி வருவதால், அப்பகுதியில் நடமாடும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறு அருகே இக்கா நகர் உள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன், கேரள மதுபான விற்பனை நிலையம் தொடங்குவதற்காக தனிநபர் கட்டிடம் கட்டினார். இக்கட்டிடத்தின் பணிகள் நிறைவு பெறாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டிடம் முழுவதும் பாழடைந்து கிடக்கிறது. இதனை சாதகமாக்கி சமூக விரோத செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

தினசரி காலை முதல் இரவு வரை 17 வயது சிறுவர்கள் தொடங்கி, பெரியவர்கள் வரை மது, கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பயன்படுத்தும் இடமாக மாறி வருகிறது. இக்கட்டிடத்திற்கு அருகில் பொறியியல் கல்லூரி, மின்வாரிய அலுவலகம், தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு ஆகியவை அமைந்துள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், சமூக விரோதச் செயல்கள் அரங்கேறி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Tentacle building ,drug dealers ,Munnar ,building , Munnar, drug, tent, building, police
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...