×

சிறை கைதிகள் மோதல்: அதிகாரிக்கு அடி உதை

பரூய்பூர்: மேற்கு வங்க மாநிலம், 24 பர்கனாஸ் மாவட்டத்தில் சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் இரு கும்பல்களுக்கு இடையே நேற்று முன்தினம் மாலை மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு, கடந்த 2018ம் ஆண்டு முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்த சிறை கட்டிடத்தின் மீது கற்களை வீசி சேதப்படுத்தினர்.

இந்த மோதலை தடுக்கும் முயற்சியில்  சிறை அதிகாரி சியாமால் பட்டாச்சாரியா ஈடுபட்டார். அப்போது கைதிகள் அவரையும் தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, சிறையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags : officer ,Prisoners ,confrontation ,kick , Prisoners, confrontation, officer, kick
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...