×

அதிமுக-பாஜ கூட்டணி ஆட்சி: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை:  காஞ்சிபுரம் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பாஜ தேசிய பொது செயலாளர் முரளிதர்ராவ், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பிரதமர் உள்பட நாங்கள் நாட்டு மக்களிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளோம்.  ஆனால் துரதிஷ்டவசமாக கலவரம் உருவாக வேண்டும் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் 2021 தேர்தலில் பாஜ அங்கம் வகிக்க கூடிய அரசுதான் வந்தாக வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.  மேலும், பிரதமர் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறப் போவதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது பற்றி கேட்டதற்கு, பிரதமர் அலுவலகம் அல்லது பிரதமர் குறித்து என்ன முடிவு எடுப்பார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.  ஆகையால் அதுகுறித்து கருத்து எதுவும் சொல்ல இயலாது என்றார்.



Tags : BJP ,Pon.Radhakrishnan The AIADMK ,Pon.Radhakrishnan , AIADMK, BJP Alliance, Pon.Radhakrishnan
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...