×

தடுப்பணையில் குளித்த போது பள்ளி மாணவன் நீரில் மூழ்கி சாவு

சென்னை: பள்ளிப்பட்டு ஆஞ்சநேய நகரை சேர்ந்தவர் டேவிட் மகன் தருண் குமார் (12). பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம்போல் நேற்று காலையில் பள்ளிக்கு சென்றான். மதிய உணவு இடைவேலையின்போது சக நண்பர்கள் ஐந்து பேருடன் பள்ளிப்பட்டு - சோளிங்கர் சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் அருகில் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் நிரம்பியுள்ள மழை நீரில் குளிக்க சென்றனர்.  
பள்ளி மாணவர்கள் ஐந்து பேரும் நீண்ட நேரம் தடுப்பணையில் குதித்து குளித்துக்கொண்டிருந்தனர்.

அவர்களில், தருண்குமார் வெகு நேரமாகியும் தடுப்பணையிலிருந்து வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் அப்பகுதியில் இலருந்தவர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து நீரில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தடுப்பணையில் இறங்கி தேடி தருண் குமாரை சடலமாக மீட்டனர். நீச்சல் தெரியாததால் நீரில் முழ்கி மாணவன் இறந்ததாக கூறப்படுகின்றது. மாணவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : school boy , Obstruction, bath, schoolgirl, drowning, death
× RELATED சென்னை – கும்மிடிப்பூண்டி புறநகர்...