×

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெரம்பூர்: பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 27வது தெருவை சேர்ந்த திரிசாரே டிக்காஸ்ட் (48) என்பவர், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென திரிசாரே டிக்காஸ்ட் கழுத்தில் கிடந்த 2 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து அவர் கொடுத்துள்ள புகாரின்படி பெரவள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags : To the woman, Chain, flush
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...