புழல்: புழல் லட்சுமிபுரம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை பாலன் என்ற தொழிலாளி செய்தபோது லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த புரட்சி ராஜேஷ் உள்ளிட்ட 4 பேர் வந்து மாமூல் கேட்டு பாலனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் பாலன் தனது சூப்பர்வைசர் பாலமுருகனுக்கு தெரிவித்தார். உடனே பாலமுருகன் மற்றும் வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர் வந்து தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இரும்பு ராடால் பிரகாஷின் தலையில் அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீலை தாக்கியதாக லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (25) மற்றும் அவரது உறவினர் விக்கி (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.