×

நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 299 நாள் சிறை

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 299 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆதம்பாக்கம் நெருப்பு மேடை பகுதியை சேர்ந்தவர் காணிக்கைராஜ் (21). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் முன் ஆஜராகி, ‘‘நான் இனிமேல் எந்த குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடமாட்டேன்’’ என நன்னடத்தை பதிவேட்டில் எழுதி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜலால் என்பவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆதம்பாக்கம் போலீசாரால் காணிக்கைராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நன்னடத்தை விதிமீறி குற்றச் செயலில் ஈடுபட்ட காணிக்கைராஜை 299 நாட்கள் ஜாமீனில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் பரிந்துரை செய்தார். அந்த உத்தரவு சிறை துறைக்கு அனுப்பப்பட்டது.

Tags : Rowdy ,jail , Rowdy, violation of probation, 299 days, jail
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது