×

மனைவி இறந்ததால் விரக்தி விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று தந்தையும் தற்கொலை: அலங்காநல்லூர் அருகே பரிதாபம்

அலங்காநல்லூர்: மனைவி இறந்த சோகத்தில், 2 மகன்களை விஷம் கொடுத்து கொன்று தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் அலங்காநல்லூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அரியூரை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி சுந்தர் (42). மனைவி இந்துமதி (34). மகன்கள் சுனில் (14), விமல் (10). இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முறையே 6ம் வகுப்பு, 4ம் வகுப்பு படித்து வந்தனர். குடும்பத் தகராறு காரணமாக 6 மாதங்களுக்கு முன்பு இந்துமதி தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்ததால் சுந்தர் மனவிரக்தி அடைந்தார். மகன்களை பராமரிப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.

எப்போதும் மனைவியை நினைத்து, மகன்கள், உறவினர்களிடம் புலம்பி வந்தார். நேற்று காலை 7.30 மணி ஆன பின்பும், சுந்தர் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில், சுந்தர் மற்றும் மகன்கள் சுனில், விமல் ஆகியோர் இறந்து கிடந்தனர். அருகில் வாழைப்பழம், விவசாயத்திற்கு பயன்படுத்தும் குருணை விஷ மருந்து பாக்கெட் கிடந்தன.

தகவலறிந்த அலங்காநல்லூர் போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  போலீசார் வீட்டில் சுந்தரின் செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோவை பார்வையிட்டனர். அதன்மூலம், வாழைப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து மகன்கள் 2 பேரையும் கொன்று விட்டு, சுந்தரும் அதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் அலங்காநல்லூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை சம்பவத்தை சுந்தர் தனது செல்போனில்  வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

Tags : sons ,suicide ,death , Due , wife’s death, killing , 2 sons, father, suicide, pity
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி