×

தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம் 3 வயது குழந்தை உடலில் 11 ஊசிகள் கண்டுபிடிப்பு: அறுவை சிகிச்சையில் அகற்றும் பணி தீவிரம்

திருமலை: தெலங்கானாவின் வெபனகன்லா கிராமத்தை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி அன்னபூர்ணா. இவர்களுக்கு 3 வயதில் லோகநாத் என்ற மகன் உள்ளான். லோகநாத் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். இதையடுத்து நேற்று முன்தினம் தங்களது வீட்டின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு லோகநாத்தை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது குழந்தையின் தொடையில் துணி தைக்கும் ஊசி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து, வெளியே எடுத்தனர்.

ஊசி எடுத்த பின்னரும் குழந்தை அழுது கொண்டே இருந்ததால்  சந்தேகமடைந்த டாக்டர்கள், உடல் முழுவதையும் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது குழந்தையின் உடலில் மேலும் 10 ஊசிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குழந்தையின் உடலில் சிக்கியிருக்கும் 10 ஊசிகளை அகற்றும் பணியில் டாக்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பக்கத்து வீட்டில் விளையாட செல்வதால் அவர்கள் இவ்வாறு குழந்தையின் உடலில் ஊசியை ஏற்றியுள்ளதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Tags : Telangana ,removal , Telangana, 3 year old child, body, 11 needles, invention
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...