ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படையை சேர்ந்த அடில் அகமது தார் நடத்திய இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய தந்தை, மகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர். இவர்கள் பீர் தாரிக், இன்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.